appeared was a child

img

அடி முதுகுவலி

மனிதன் தோன்றிய காலம் தொட்டுச் சிறுவர் முதல் பெரியவர் வரை எக்காலத்திலும் வரக்கூடிய ஒரு நோய் அடிமுதுகுவலி. பழங்கால ஓவியம், சிற்பகம் ஆகியவற்றிலும் கிறிஸ்தவ வேதத்திலும் இந்நோய் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. தம் வாழ்நாளில் ஒரு முறையேனும் அடி முதுகு வலி வராதவர்கள் யாராவது இருப்பார்களா? என்றால் சந்தேகம்தான். இவ்வலி வருவதற்கு ஆண், பெண், ஏழை, பணக்காரர், படித்தவர், படிக்காதவர் என்ற பேதமே கிடையாது.